எனக்கு புத்தக மதிப்புரை எழுத தகுதி இல்லை என்றாலும் நான் படித்ததில் மிகவும் என்னை உணர்ச்சிவசப்படவைத்த புத்தகம் என்பதால் எழுதுகிறேன்.
சி.சு.செல்லப்பா(1912- 1998) பிறந்தது மதுரை மாவட்டம் வத்தலகுண்டு. இவர் சிறுகதை,நாவல்,கவிதை,விமர்சனம் ஆகிய துறைகளில் சிறந்து இயங்கியவர்.
இந்த குறுநாவலை நீங்கள் படிக்கும்பொழுது உங்களை அறியாமல் உங்கள் மனதிற்குள் கைதட்டிக்கொள்வீர்கள். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் காளைகளை வெளியே அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர்தான் 'வாடிவாசல்' (கிட்டி).
ஜல்லிக்கட்டு பற்றி தமிழில் வெளிவந்த முதல் படைப்பு வாடிவாசல் ஆகும்.இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்கள் மனதில் நிற்பது உறுதி.காளை முதற்கொண்டு. நீங்கள் இந்த நாவலை படித்து முடித்த பிறகு நாற்பது வருடங்களுக்கு முன் எழுதியதா? என்று வியக்குமளவிற்கு மிகச்சிறப்பாக இருக்கும். ஒரு ஜல்லிக்கட்டு நடக்கும் விதத்தை இவ்வளவு நேர்த்தியாக யாரும்
எழுதிவிட முடியாது. பல இடங்களில் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த நாவலின் முடிவில் நீங்கள் நிச்சயமாக ஆனந்தம் அடைவீர்கள்.
அன்புடன்
ஜேம்ஸ்
Thursday, December 30, 2010
Tuesday, December 28, 2010
அறிமுகம்
வணக்கம் தோழர்களே,
பெயர் ஜேம்ஸ், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் இந்த வலைப்பூவை துவங்கியதற்கு காரணம், தமிழில் கணக்கிலட்ங்கா வலைப்பூக்கள் உள்ளன. பொழுதுபோக்கு, விமர்சனக்கட்டுரை, அறிவியல், சமூக சிந்தனை, இலக்கியம், சினிமா, விளையாட்டு இன்னும் ஏராளம். இதில் நான் என்ன எழுதுவது? ஆனாலும் என் சிந்தனைக்கும், புத்திக்கும் எட்டியதை இங்கு பதிவு செய்ய விறும்புகிறேன். என்னுடைய இந்த வலைப்பூவை நான் உருவாக்க உந்துதலாய் இருந்தது, நான் படித்த படித்துகொண்டிருக்கிற நூல்களும், வலைப்பூக்களுமே. அனைத்து எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்த பதிவில் என் கருத்துகளோடு உங்களை சந்திக்கிறேன்.
பெயர் ஜேம்ஸ், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் இந்த வலைப்பூவை துவங்கியதற்கு காரணம், தமிழில் கணக்கிலட்ங்கா வலைப்பூக்கள் உள்ளன. பொழுதுபோக்கு, விமர்சனக்கட்டுரை, அறிவியல், சமூக சிந்தனை, இலக்கியம், சினிமா, விளையாட்டு இன்னும் ஏராளம். இதில் நான் என்ன எழுதுவது? ஆனாலும் என் சிந்தனைக்கும், புத்திக்கும் எட்டியதை இங்கு பதிவு செய்ய விறும்புகிறேன். என்னுடைய இந்த வலைப்பூவை நான் உருவாக்க உந்துதலாய் இருந்தது, நான் படித்த படித்துகொண்டிருக்கிற நூல்களும், வலைப்பூக்களுமே. அனைத்து எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடுத்த பதிவில் என் கருத்துகளோடு உங்களை சந்திக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)